தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 18, 2021

தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 



தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!




 



ஆணை : தேனி மாவட்டத்தில் அடங்கிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் , 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமித்து ஆணையிடப்பட்டது . இந்நேர்வில் , நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் சிலர் பணிக்கு செல்ல மறுப்பதுடன் மருத்துவ காரணங்களின் பேரில் மருத்துவ விடுப்பு அளிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து தகவல்கள் வரப்பெற்றுள்ளது . வாக்குச்சாவடி பணியானது தேர்தல் ஆணைத்ததால் முக்கியத்துவம் அளிக்கப்படும் பணியாகும். தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்கள் எதிபாராதவிதமாக மருத்துவ விடுப்பில் செல்வதை தவிர்க்க இயலாது . எனினும் , சிலர் தேர்தல் பணியை புறக்கணிக்கும் நோக்கில் மருத்து விடுப்பு எடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது . எனவே , மருத்து விடுப்பின் பேரில் செல்லும் அலுவலர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட அலுவலர்கள் கொண்ட குழுவினை நியமித்து ஆணையிடப்படுகிறது.


Post Top Ad