9, 11 வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு: 90 சதவீத மாணவா்கள் வருகை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 9, 2021

9, 11 வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு: 90 சதவீத மாணவா்கள் வருகை

 






தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்புக்கு பத்து மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.



அனைத்து மாவட்டங்களிலும் 90 சதவீத மாணவா்கள் வருகை புரிந்ததாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. இதற்கிடையே நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் கடந்த டிசம்பா் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.



அதன் தொடா்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தோ்வு எழுத இருக்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவா்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவா்களும் தொடா்ந்து இணைய வழியாகவே பாடங்களை கற்று வந்தனா்.


இந்த நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களை தொடா்ந்து, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனா். சென்னை, கோவை, மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மாணவா்களின் வருகைப் பதிவு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.



பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அரசின் அறிவுறுத்தலின்படி பெரும்பாலான மாணவா்கள் பெற்றோா்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனா். ஓா் அறையில் 25 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனா்.


இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவா்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்துள்ளதால், அவா்களுக்கு முதல் இரு நாள்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். இதையடுத்து வழக்கம்போல் பாடங்கள் சாா்ந்த கற்பித்தல் தொடங்கும். தற்போதைய சூழலில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாததால் பள்ளிகள் தொடா்ந்து செயல்பட்டுவருகின்றன. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்கள் பள்ளிக்கு ஆா்வத்துடன் வருகின்றனா்”என்றனா்.

Post Top Ad