ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 24, 2020

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல்

 





ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் அரசு பள்ளி மாணவர் களுக்கு இலவச மிதிவண் டிகளை அமைச்சர் செங் கோட்டையன் வழங்கினார்.




பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது ; இன்று தேசிய விவசா யிகள் தினம் . 75 சதவீதம் விவசாயிகள் உள்ள மாநி லம் தமிழகம். தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் செய்துவருகிறார் . நாராயணசாமி நாயுடு பெயரால் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். 



ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை திரும்ப பெற அரசு ஆலோசனை செய்து வருகிறது. நீட் தேர்வு , ஐ.ஐ.டி ,, ஜே இஇ படிப்பிற்கு பயிற்சி பெற பதிவு செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் ஜனவரி மாதம் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.






Post Top Ad