ஏதாவது ஒரு டிகிரி முடிச்சிருந்தா போதும்... எஸ்பிஐ பேங்கில் வேலை இருக்கு!
இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ட்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 470 காலியிடங்கள் இருக்கின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
பணி : அப்ரெண்டீஸ்
காலியிடங்கள் - 8500
தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் - 470
உதவித் தொகை : முதல் வருடத்தில் மாதம் ரூ.15,000. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு ரூ.19,000 வழங்கப்படும்
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் (யுஜி டிகிரி) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு, மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் - எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://nsdcindia.org/appernticeship அல்லது https://appernticeshipindia.org அல்லது https://bfsissc.com அல்லது https:// bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in ஆகிய ஏதாவது ஒரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விரிவான விவரங்கள் பற்றியும் இந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.12.2020