கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தாமல் பட்டம் வழங்க இயலாது எனவும் தேர்வு நடத்துவது கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது. மராட்டியம், டெல்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு அளித்திருந்தனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.