அரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 31, 2020

அரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு!






கடலுார் மாவட்டம், அரசு பள்ளி தமிழாசிரி யை மகாலட்சுமிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்து உள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகள்; மன அழுத்தம் தவிர்க்க அறிவுரை; பெற்றோருக்கு அறிவுரையும் கூறி வரும், கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல், நெகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை, மகாலட்சுமியின் சேவைக்கு, என் பாராட்டுக்கள்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.




Post Top Ad