தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும், 3,680 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 101 ஆய்கவகங்கள் உள்ளன(53 அரசு மற்றும் 48 தனியார் ஆய்வகம்) இன்று ஒரே நாளில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 105 பேர் உள்ளனர்.
இன்று கொரோனா உறுதியானவர்களில், தமிழகத்தில் உள்ளவர்கள் 3,636 பேர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 19 பேர்
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்: 25 பேர்.
பரிசோதனை
இன்று மட்டும் 37,309 மாதிரிகளுக்கும், இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இன்று மட்டும் 35,921 பேருக்கும், இதுவரை மொத்தம் 14,64,281 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இன்று கொரோனா உறுதியான 3,680 பேரில் , 2,196 பேர் ஆண்கள். 1,484 பேர் பெண்கள்.மொத்தமாக 79,482 ஆண்களும், 50,657 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்
உயிரிழப்பு
இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்தனர். அதில் 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,829 பேர் உயிரிழந்துள்ளனர்.
வயது வாரியாக
12 வயது வரை உள்ளவர்களில் 6,442 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 1,08,035 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15,784 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.