தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 3, 2020

தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை





தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது.


இந்நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.




திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி  உள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


10ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமானதாக  உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கூடுதலாக தேவைப்படின் அருகாமையில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் இருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும்,

அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பள்ளியில் தயார் நிலையில் வைக்குமாறும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

* மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்

* பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு

* முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.

* சுமார் நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.

* பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை முடிவு.

* பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.*

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம்.

* இடவசதி கொண்ட நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad