10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - Twitter Trending-ல் முதலிடம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 3, 2020

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - Twitter Trending-ல் முதலிடம்!




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வருகிறது. தேர்வை தள்ளி வைக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. மாணவர்களின் இந்த கோரிக்கை தமிழக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.  1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

Post Top Ad