வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை - தமிழக அரசு வெளியீடு ! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 21, 2020

வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை - தமிழக அரசு வெளியீடு !



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துதல் மற்றும் விடைத்தாள் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு - 21.05.2020


1. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே , 27.03.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன . இது தவிர , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது .

2 . மேற்குறிப்பிட்ட பொதுத் தேர்வுகள் 01.06.2020 முதல் நடத்தப்படும் எனவும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் 27.05.2020 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது . எனினும் , தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளை ஏற்று , 01.06.2020 தொடங்க இருந்த பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது .

3 . இந்நிலையில் பொதுத் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ள 20.05.2020 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை ( நிலை ) எண் 246 இல் உத்தரவிடப்பட்டுள்ளது :

காரணமாக • கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் நோக்கத்தின் அடிப்படையில் , ஒரு தேர்வறைக்கு 20 தேர்வர்கள் தேர்வெழுதுவர் மற்றும் தற்போதைய நடைமுறையை மாற்றி ஒரு தேர்வறைக்கு 10 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவர் .

* அதற்கேற்ப , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , அவரவர் பயிலும் பள்ளிகளையே தேர்வு மையமாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே ( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக ) தேர்வர்கள் தேர்வு எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இதனால் , மாணவர்கள் அதிக தூரம் பயணம் செய்வதும் தவிர்க்கப்படும் .

• இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும் , அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும் . இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர் .

• மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும் , அவற்றோடு இணைக்கப்பட்ட 4384 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும் . இதனால் மொத்தம் 7400 தேர்வு மையங்களில் 8.41 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர் .


• இது தவிர , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும்

• இத்தேர்வு எழுதும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 46.37 இலட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் .

• தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் காலையில் பணி தொடங்குவதற்கு முன்னும் மற்றும் மாலையில் பணி நிறைவுற்ற பின்னும் சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

• தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) இருப்பின் அத்தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையங்கள் ( Altemate Examination Centres ) அமைக்கப்படும் . நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் ( Special Examination Centres ) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனுக்காக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் 11.06.2020 முதல் தேர்வு முடிவுறும் வரை அனைத்து வகை அரசு / தனியார் பள்ளி விடுதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும் . அவ்வாறு செயல்படும் விடுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் / நிர்வாகங்கள் மூலம் தினமும் இருமுறை உரிய முறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை உறுதி செய்யப்படும் .

• குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள் / விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .


• வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்த ஊருக்குத் திரும்ப வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card ) அல்லது தேர்வு அனுமதி சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அம்மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் / பாதுகாவலர்கள் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர் . மேலும் , வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card ) அல்லது தேர்வு அனுமதிச் சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அவர்களையும் அவர்கள் பெற்றோர் / பாதுகாவலர்களையும் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்களது பெற்றோர் மற்றும் காப்பாளர்களுடன் வந்து செல்ல அனுமதி வழங்கப்படும் . இவ்விலக்கானது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் . தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக தேர்வு நுழைவுச் சீட்டு ( Hall ticket ) கணினி மூலம் பதிவிறக்கம் ( Online download ) செய்து கொள்ள வழிவகை செய்யப்படும் . மேலும் மாணவர்கள் இதனை பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் . மேற்காண் இரு முறைகளிலும் நுழைவுச் சீட்டு பெற இயலாதவர்களுக்கு தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச் சீட்டு பெற அழைக்காமல் அவர்களது வீடுகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

• மாணவர்கள் வெளியூர் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக ( Containment Zone ) இருந்தால் , அப்பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும் . எனினும் , அத்தகைய மாணவர்களும் , பெற்றோர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் , அதேபோல் மாணவர்கள் வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் குடியிருப்பு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக ( Containment Zone ) இருந்தால் , அவர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கான வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படும் . மேற்காணும் தேர்வு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிமுறைகளைச் சார்ந்து மேற்கொள்ளப்படும் . .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

Post Top Ad