வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு...
பிரதமரின் காரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் கீழ் தொழிலாளர்கள் வைப்பு நிதியில் இருந்து 75 விழுக்காடு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 279 கோடியே 65 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது...