எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 7, 2020

எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி!



தமிழகத்தில் , பிளஸ் 2 , பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடந்து வரு கிறது . மொழிப்பாடங் கள் முடிந்துள்ள நிலையில் நாளை மறு நாள் முதல் பிரதான பாடத்தேர்வுகள் நடை பெற உள்ளது .





பிளஸ் 2 தேர்வு வரும் 24ம் தேதியும் , பிளஸ் 1 தேர்வு வரும் 26ம் தேதியும் முடிகிறது . பிளஸ் 1 பொதுத் தேர் வுக்கு 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் , பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 41 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் , முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் ஈடுபடு வார்கள் . ஆனால் , இந்த முறை 9 , 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசி ரியர்கள் , 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக் கும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு , வரும் 27ம் தேதி தொடங்க உள் ளது . ஆனால் , தேர்வு பணிக்கு பல்வேறு இடங் களுக்குச் செல்லும் ஆசி ரியர்கள் , மீண்டும் மதியம் தங்கள் பள்ளிகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .

Post Top Ad