உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.