தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், பெய்து வந்த பருவமழை தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகம் முழுவதும் லேசான மழை பெய்து வந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்த ஆய்வு மையம், இந்த மழை அடுத்த மூன்று, நான்கு தினங்களுக்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.