சந்திரயான் 2: 14 நாட்கள் முடிந்த பிறகு என்னவாகும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 14, 2019

சந்திரயான் 2: 14 நாட்கள் முடிந்த பிறகு என்னவாகும்?






முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சந்திரயான் 2-ல் லேண்டர் விக்ரமை விடுத்து, ரோவர் பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"14 நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும். செப். 7-ம் தேதி, சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருக்கிறது. 21-ம் தேதி வரை அங்கு சூரிய ஒளி இருக்கும். குளிர் ஆரம்பித்தபிறகு வெப்பநிலை மைனஸ் 150 டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும். அப்பொழுது விக்ரமின் சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும்.

14 நாட்கள் முடிந்தபிறகு மிகப்பெரிய கேள்விக்குறி எழும். அதற்குள் எல்லா சாத்தியக்கூறுகளையும் நாம் முயன்று பார்க்கலாம். சில நாட்கள், சில வாரங்கள் சமிக்ஞையே இல்லாத பல செயற்கைக்கோள்களில் திரும்பத் திரும்ப முயற்சித்து உயிர்ப்பித்திருக்கிறோம். நிலவு அல்லாத இடங்களில் இது பலமுறை நடந்திருக்கிறது. அந்த நம்பிக்கை இஸ்ரோவுக்கு இருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Top Ad