போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 18, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது'' என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சேகர் கூறினார்.அவர் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி கொள்கையால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் இருக்காது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரியில் ஜாக்டோ - ஜியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அரசு அலுவலர், ஆசிரியர்கள் என 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் அரசு அலுவலர், ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

Post Top Ad