இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 20, 2019

இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்




தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல மழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவுகிறது. இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி இருக்கிறது.


இது வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுஇருப்பதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

வெப்ப சலனம் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, , திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடடும்- வட மாவட்டங்களை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்கள்.

Post Top Ad