அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு - முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 23, 2019

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு - முழு விவரம்





தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் கற்றுத்தரும் திறனை அறியவும், மாணவர்களின் கற்கும் திறனை அறியவும் ஆய்வுக்குழுக்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சவுபாக்கியவதி : புதுக்கோட்டையை சேர்ந்த சவுபாக்கியவதி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கற்றல், கற்பித்தல் திறன் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலவலர்கள் தலைமையில் பல்வேறு சிறப்பு குழுக்களை அமைத்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்களின் கற்றல் திறனை அறிந்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : இந்த ஆய்வுகளை அரசும், பள்ளிக்கல்வித்துறையும் அடிக்கடி மேற்கொள்ள ண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அந்த உத்தரவில் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணிதத்திறன் மேம்பாடு : அதேபோல, நிபுணர் குழுக்களின் ஆலோசனைகளில் பேரில், கல்விக்கொள்கையின் அடிப்படையில், தொடக்க கல்வியில் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் மேம்பட மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டு மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை முடித்து வைத்தது.

Post Top Ad