பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 6, 2019

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்

*கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறி,  வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்*

*விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்*

*2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் பருவ துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு ஜுன்,  ஜுலையில் நடைபெறும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது*

*தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும்  தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கான கட்டணமாக ஆன்லைன் பதிவு உள்பட ரூ.175 செலுத்த வேண்டும்*

*மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஏப்.23,  ஏப்.24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்*

*மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்,  சிறப்புத் துணைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன  என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

Post Top Ad