குறிப்பாக, ஜனநாயக சவால்கள், சுதந்திர போராட்டம் மற்றும் இயக்கம் ஆகிய தலைப்பின் கீழ் வரும் பாடப் பகுதிகளை இந்த கல்வி ஆண்டில் நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். அரசியல் பிரிவில் 3 பாடங்களும், சுற்றுச்சூழல் பிரிவில் 2 பாடப் பகுதியும் நீக்கப்பட்டு அகமதிப்பீட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ளப்படும். தேர்வின்போது இந்த பாடப் பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறாது. நீக்கப்பட்ட பாடப் பகுதிகள் தொடர்பான விவரங்கள் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.