நீதிமன்ற அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்து அறிவிக்க ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை (24-01-2019) காலை சென்னையில் நடைபெறவுள்ளது.
திட்டமிட்டபடி நாளைய போராட்டம் மிக மிக எழுச்சியாக நடைபெறும்.
நாளை காலை போராட்டம் வட்ட அளவில் ( தாலுகா அளவில் ) என்பதில் மாற்றம் செய்யப்பட்டு, மாவட்டத் தலைநகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நாளைய போராட்டம் மாவட்ட அளவில் மாவட்ட தலைநகரில் நடைபெறும்.
நீதிமன்றம் நமக்கு ஆதரவாகவே உள்ளது. எனவே, நாளைய போராட்டக் களத்தில் நீதிமன்றத்திற்கு எதிராக எந்தக் கருத்தையும் பதிவு செய்யக் கூடாது.
இன்றைய போராட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது. மாவட்ட அளவில் நாளை நடைபெறும் போராட்டம் இதுவரை என்றுமே இல்லாத அளவில் மிக மிக எழுச்சியாக நடத்திட வேண்டும். அனைத்து வட்டாரக் கிளைப் பொறுப்பாளர்கள் இன்று இரவே நாளை மாவட்டத் தலைநகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒருவர் தவறாமல் பங்கேற்பதற்குரிய ஏற்பாடுகளை விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதோடு நாளைய போராட்டத்திற்கு ஒருவர் தவறாமல் அழைத்துவர உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
நாளை பள்ளிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை....
*இவண்: ஆ.சபரிராஜ்,*
*ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்...*