வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 3, 2018

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை

''ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,'
' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார்.


பொது செயலர், கோபிநாத் முன்னிலை வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:'கஜா' புயல் நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம் பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர் பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad