School Morning Prayer Activities - 12.11.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 12, 2018

School Morning Prayer Activities - 12.11.2018



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:



திருக்குறள்:83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

பழமொழி :

Do good and have good

நன்மை செய்து நன்மை பெற வேண்டும்

பொன்மொழி:

கடவுள் எவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,
அதை மனிதன் பிரிக்காமல் இருக்க வேண்டும்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

English words and meaning

Astute.     தந்நிரமுள்ள
Astir          அசைகிற
Avow.         ஒப்புக்கொள்
Ambit.        வரம்பு
Ailments.  நோய்.

அறிவியல் விந்தைகள்

காகம்
* கரிய நிறம் கொண்ட நான் கார்விடே குடும்பத்தைச் சேர்ந்தவன்
* மயில் போல நாங்கள் அழகாய் இல்லாவிட்டாலும் குயில் போன்ற குரல் இல்லாவிட்டாலும் நாங்கள் குணத்திலும் அறிவிலும் உயர்ந்தவர்கள்
* நீங்கள் தெருவில போடும் அழுகிய பொருட்களை உண்டு சுத்தம் செய்வதும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொது மொழிக்கு இலக்கணம் நாங்களே.

பொது அறிவு :

1.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்

2.மரகதத் தீவு?
அயர்லாந்து

நீதிக்கதை

தங்கத் தூண்டில்


வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.

இதைப் பார்த்த சுந்தர், “”அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர்.

“”சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் சுந்தர். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

“”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.

பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுந்தரிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன், “”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.

வசந்த்தைப் பார்த்து அவர், “”நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.

இன்றைய செய்தி துளிகள்:

1.இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது: அமைச்சர் காமராஜ்

2.அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது... செங்கோட்டையன் பேட்டி

3.கஜா புயல் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

4.‘கஜா’ புயல் 15-ம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

5.உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை

Today's Headlines

🌻The Indian Meteorological Survey has issued Red Alert because of the heavy rainfall in some parts of Tamil Nadu, when the Ghaja storm, which originated in the Bank of Bengal, crosses the coast at about 90 km between Cuddalore and Sriharikota.

🌻More than 6 lakh people participated in the Group-II exam held yesterday in Tamil Nadu.

🌻The Election Commission has ordered to collect the details of the workforce and submit it by 20th

🌻India's star player Bajrang Punia is the world's number one wrestler in the 65kg category.

* The Indian team wins the 182-run  in the third T20 match against West Indies and also won the tournament too.

Post Top Ad