இவர்களில் ஒருவரான டி.வி. பிந்து கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்ததால் இவர் அகளி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
முதல் நாள் வகுப்புக்கு சென்ற இவரை மாணவர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி முதல்வரிடம் பிந்து புகார் செய்தார். அவர் மாணவர்களை அழைத்து பேசி பிரச்னையை முடித்து வைத்தார்.