குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 31, 2018

குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்





குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பர் மாத இறுதிக்குள்
வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


*தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல் நிலை தேர்வினை 2017 பிப்ரவரி 19ம்தேதி அன்று நடத்தி அதற்கான முடிவினை 2017 ஜூலை 21ம்தேதி அன்று வெளியிட்டு முதன்மை தேர்வினை 2017 அக்டோபர் 13, 14, 15ம் தேதிகளில் நடத்தியது


*இதற்கான தேர்வு முடிவுகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


*விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.


*மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post Top Ad