உலக வரலாற்றில் இன்று ( 17.09.2018 ) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 17, 2018

உலக வரலாற்றில் இன்று ( 17.09.2018 )




செப்டம்பர் 17 (September 17) கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
1631 – ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
1789 – வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.
1858 – ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.
1908 – ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த “தொமஸ் செல்ஃபிரிட்ஜ்” என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 – சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
1929 – லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.
1939 – சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1949 – டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.
1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.
1978 – இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1980 – போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.
1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
1993 – கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.
1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
   2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1879 – ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973)
1889 – வ. ரா., மணிக்கொடிக்கால எழுத்தாளர்
1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)
1906 – ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. 1996)
1930 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (இ. 2013)
1944 – ரைன் மெஸ்னர், இத்தாலிய மலையேறுநர்
   1950 – நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி
1974 – ரஷீத் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1665 – நான்காம் பிலிப், ஸ்பெயின், போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1605)
1948 – ரூத் பெனடிக்ட், அமெரிக்க மனிதவியலாளர் (பி. 1887)
  1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1911)
1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
1994 – கார்ல் பொப்பர், ஆஸ்திரிய மெய்யியலாளர், (பி. 1902)

சிறப்பு நாள்

அங்கோலா – தேசிய வீரர்கள் நாள்

Post Top Ad